Saturday, October 22, 2005

sura
இன்று பழைய குப்பைகளைக் கிளறியபோது கண்ணில்பட்ட நாட்குறிப்புப் பதிவொன்று. நான் ஒருபோதும் நாட்குறிப்புக்கள் தொடர்ந்து எழுதியவனல்ல. 2000ம் ஆண்டு நாட்குறிப்பைப் பார்த்தபோது, நாலைந்து பக்கங்கள்தான் எழுதியிருந்தது தெரிந்தது (பிறகு வந்த வருடங்களில் அந்த நாலைந்து பக்கங்களைக்கூட எழுதியதில்லை). சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புக்கள் வாசித்தபோது எழுதிய குறிப்பாய் இருந்ததால், ஒரு நனவிடைதோய்தலாய்ப் பார்க்கமுடிந்தது.

file1
இந்தக் 'கவிதையும்' கிட்டத்தட்ட அந்த ஆண்டுகளில் எழுதப்பட்டது என்று நினைக்கின்றேன். இப்போது நிதானமாய்ப் பார்க்கும்போது சுந்தர ராமசாமியின் 'உன் கவிதையை நீ எழுது'வின் பாதிப்பு (அல்லது அப்பட்டமான கொப்பி மாதிரியும்) இருந்ததாயும் தெரிகிறது.McMaster University தமிழ் மாணவர்கள் வெளியிட்ட (விழிப்பு) புத்தகமொன்றிலும், நண்பன் ஒருவன் ஆசிரிய குழுவில் இருந்தபோது இது வெளிவந்திருந்தது. இப்படி இந்தப்பொழுதில் எழுதியிருப்பேனா என்பது ஒருபுறமிருக்க, அந்தக்காலத்தில் எப்படியிருந்திருக்கின்றேன் என்று ஒரு கண்ணாடியைப் போல பிரதிபலிப்பதால் அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

ஜந்து வருடங்களுக்கு முன்பான நினைவுகளை ஒருமுறைச் சுரண்டிப்பார்க்கவும், சுந்தர ராமசாமியின் அந்தக்காலத்துப் பாதிப்புப் பற்றியும் நினைவு கொள்ளவும் இந்த இரு குறிப்புக்களும் உதவுவதால், அவற்றுக்கும் நன்றி :-).

2 comments:

Thangamani said...

:)

Anonymous said...

சரியான குப்பைதான்.

---------
Voucher இல்லை வோச்சர்