Tuesday, November 29, 2005

(அண்மையில்) படித்ததில் பிடித்தவை

ஆரம்பம் இங்கே

நிவேதா கொழும்பிலிருந்து அண்மையில் வலைப்பதிக்க ஆரம்பித்திருக்கின்றார். இறுதியாக எழுதிய கனத்துப்போன நினைவுகள் மிக அருமையாக இருக்கிறது. நேர்மையாகக் கருத்துக்களை வைக்கும்போது எந்தப்பயமோ, தயக்கமோ வருவதில்லை என்பதற்கு இந்தப்பதிவு நல்லதொரு உதாரணம். கவனிக்க வேண்டிய முக்கிய விடயம், அவரது மொழி ஆளுமை. ஒரு விடயத்தை எழுதுவது என்பது பெரிய விடயமல்ல, அதை எப்படி வாசிப்பவருக்கு present செய்கின்றோம் என்பதில்தான் உண்மையான எழுத்தின் பலம் இருக்கிறது. மிக இயல்பான எழுத்து நடை நிவேதிதாவுக்கு வந்திருக்கிறது. தனது பரீட்சைகளின்பின் இன்னும் நிறைய எழுதுவார் என்று எதிர்ப்பாக்கின்றேன்.

சன்னாசி, நகுலனின் புனைவுகள், பற்றியும், சல்மான் ருஷ்டியின் நாவல் பற்றியும் எழுதிய பதிவுகள் மிக அருமையானவை. சிலருடைய வாசிப்பையும், எழுத்தையும் வாயூற வாயூறப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என்றால் அதில் சன்னாசியும் ஒருவர். இந்த ஆசாமிக்கு தெரியாத விடயம் ஏதாவது இருக்கிறதா என்று பலமுறை யோசிப்பதுண்டு (அப்படி நான் நினைக்கும் இன்னொருவர் பெயரிலி). சன்னாசியுடன் என்றாவது ஒருபொழுது நேர்காணல் கண்டு எப்படியெல்லாம் எழுத, வாசிக்க ஆர்வம் வந்தது என்பது பற்றியும், எப்படி இவ்வாறான் விரிவான தளத்துக்கு வாசிப்பை விசாலிக்கச்செய்தார் என்பதையும் அறிய ஆவல். மேலும் அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்துவருபவன் என்பதால் எனது ஆதங்கம் ஒன்றையும் (விமர்சனம் செய்யாமல் எப்படி ஒரு பதிவு எழுதுவது :-)) கூறவேண்டும். நேரங்கிடைத்து, சந்தர்ப்பம் வாய்த்தால், புலம்பெயர், ஈழப்படைப்புக்களை வாசித்து தனது எண்ணங்களை சன்னாசி பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பு. இப்படி பரந்த வாசிப்புடைய சன்னாசி போன்றவர்களின் விமர்சனங்கள் ஈழ/புலம்பெயர் படைப்புக்களுக்கு இன்னும் வளம் சேர்க்கும் என்பது எனது தாழ்மையான் எண்ணம்.

மரம், கடைசியாய் எழுதிய பதிவு வித்தியாசமான கோணத்தில் அண்மைக்காலப்பிரச்சினைகளை யோசிக்கவைக்கிறது. குஷ்பு விவகாரம் குறித்து தெளிவாய் எனது கருத்துக்களை வைத்ததால் அவற்றைப்பற்றி இன்னொருமுறை பேசவேண்டிய அவசியமில்லை. குஷ்பு விவகாரத்தைச் சாட்டி, ஒரே நாளில் லிபரல்களாயும், பெரியாயவாதிகளாகவும் ஆன பலபேரை நினைக்கத்தான் பயமாயிருக்கிறது. திருமாவளவனும், இராமதாசும் குஷ்பு விவகாரத்தில் அபத்தமாய் கூறியதைச் சாட்டாக வைத்து அவர்கள் இதுவரை பேசிய அனைத்துவிடயங்களையும் மட்டந்தட்டிவிட்டுப் போகின்றவர்களைப் பார்க்கும்போதுதான், மரத்தினுடைய இந்தப்பதிவு எனக்கு முக்கியமாய்ப்பட்டது.

தமிழ்க் கலாச்சாரம், குஷ்பு விவகாரம், கற்பு குறித்து அருள்செல்வனும்
மூன்று கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். நான் யோசித்துப்பார்க்காத கோணங்களை, இன்னொரு விவாதத்திற்கான சில முக்கிய புள்ளிகளை விட்டுச்செல்வதால் அவையும் முக்கியமான கட்டுரைகளாக எனக்குத் தெரிகின்றன.

(1) மரம்
(2) ஜகாரஸ் ப்ரகாஷ்
(3) கண்ணன் (பெங்களூர்)

பி.கு: மதி, நீங்கள் கூறிய கட்டுப்பாடுகளுக்கேற்ப நான் விளங்கி எழுதினேனா தெரியவில்லை. திருத்த வேண்டியிருப்பின் சுட்டிக்காட்டவும். நன்றி.

Saturday, November 26, 2005

செல்லிடப்பேசிக்குள்ளால்...

பார்த்த காட்சிளும் பங்குபற்றிய சில நிகழ்வுகளும்


புத்தகம் வாசித்தபடி, 'காட்சிகளை' இரசிக்கும் Indigo யன்னல்கரையில்

நிலத்தைக்குடைந்து செல்லும் subway train சொற்பநேரத்தில் வெளியே வருகின்றசமயத்தில்


'கூர்' என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிதைகள் வாசிப்பு நிகழ்வின்போது

பனி பெரும்மழையாய்க் கொட்டிய ஓரிரவில்....தெரு எது நடக்கும் பாதை எது என அடையாளம் மறைந்த பொழுதில்

குறும்படங்களுக்கான ஒரு பட்டறையின்போது

கவிதை வாசித்தலைக் கேட்பதற்கும் வாசிக்கவும் வந்திருந்தவர்கள்

Tuesday, November 22, 2005

'கவிதை' என்று எழுதுவதைத்தான் இல்லாமற் செய்துவிட்டார்கள். இனிப் புதிதாய் எதையாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று (அப்பதானே fieldல் நிற்கலாம். இல்லாவிட்டால் துரத்திவிடுவார்கள் அல்லவா?) யோசிக்கலாம் என்று எனது ஏழாம் அறிவைச் சுரண்டியபோது, பிறருக்கு இலவச ஆலோசனைகள் வழங்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன். மேலும் இதற்கு சொந்தமாய் எந்த முதலீடும் இல்லாதிருப்பதால், நக்கீரர்/நாரதர் வேலை பார்க்கும் கொழுவி போன்றவர்களின் தொல்லைகளில் இருந்தும் தப்பிக்கலாம். யாராவது அடிக்க வந்தால் கூட, இது நான் எழுதியதில்லை என யாரவது unknown personஐ கைகாட்டலாம் :-).

முக்கியமாய் கீழேயுள்ள பொன்மொழிகளை ஆண்கள் வாசித்து காயத்ரி (இது நீங்கள் சைட் அடித்த/அடிக்கும் காய்த்ரி என்னும் பெண் அல்ல) மந்திரம் மாதிரி நினைவுபடுத்தி, எதிர்காலத்தில்/நிகழ்காலத்தில் உங்களுக்கு இருக்கும் துணையுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கலாம். 'எவ்வளவு நல்ல மனுசன்' என்ற பெருமைமிகுபட்டங்களை உங்கள் துணையிடம்/காதலியிடம் பெற்றுக்கொள்ளலாம். பெண்களும் அட ஆண்களும் எங்களைப் புரிந்துகொள்ளப்பார்க்கின்றார்களே என்று புன்முறுவல் பூக்கலாம். மேலும் இப்படி உங்களின் உளவியல் புரிந்தவனாய் இருக்கின்றானே என்று என்னையும் சற்றுப் பாராட்டலாம். அதிகம் பாராட்டி நிரம்பத்தும்மச்செய்து 'ஜலதோசம்' மட்டும் வரச்செய்யவேண்டாம்.

WORDS WOMEN USE

FINE
This is the word women use to end an argument when they are right and you need to shut up.

FIVE MINUTES
If she is getting dressed, this is half an hour. Five minutes is only five minutes if you have just been given 5 more minutes to watch the game before helping around the house.

NOTHING
This is the calm before the storm. This means "something," and you should be on your toes. Arguments that begin with 'Nothing' usually end in "Fine."

GO AHEAD
This is a dare, not permission. Don't do it.

LOUD SIGH
This is not actually a word, but is a non-verbal statement often misunderstood by men. A "Loud Sigh" means she thinks you are an idiot and wonders why she is wasting her time standing here and arguing with you over "Nothing"

THAT'S OKAY
This is one of the most dangerous statements that a woman can make to a man. "That's Okay" means that she wants to think long and hard before deciding how and when you will pay for your mistake.

THANKS
A woman is thanking you. Do not question it or faint. Just say you're welcome.

WHATEVER
It's a woman's way of saying *!#@ YOU!

என்ன, இதையெல்லாம் நான் தான் எழுதினேன் என்று சொல்ல ஆசைதான். ஆனால் சோகம் என்னவெனில் இது ஒரு தோழியால் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. கொஞ்சம் பொறுத்திருந்தால் நான் இதையெல்லாம் எழுதியிருப்பேன் என்று ஆண்களின் மானம் போய்விடக்கூடாது என்பதற்காய்ச் சொல்லிவைக்கின்றேன்.

Wednesday, November 02, 2005

கட்டாய விருப்ப ஓய்வு குறித்து ஒரு சத்தியக் (ம் அல்லாத) கடதாசி

சில வாரங்கள் (அல்லது சில மாதங்கள்) வலையில் எழுதுவதை நிறுத்தி நண்பர்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். சென்ற வருடம் கார்த்திகை மாதத்தில் ஏதோ ஒருநாளில்தான் வ்லைப்பதிவுகள் எழுத ஆரம்பித்திருந்தேன். இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட நூறு பதிவுகள் எழுதியிருப்பேன் போலக்கிடக்கிறது (ஆகக்குறைந்தது பத்துப் பதிவுகளாவது உருப்படியானதா என்பது வேறு விடயம் :-) ).

சரி ஓய்வு எடுத்துவிட்டு, இயலுமாயின் நல்ல செய்தியோடு திரும்பி வருகின்றேன். போவதற்கு முன், புரட்டாதி 28ந் திகதி புதிய இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தேன். அன்றைய நாளில் பிரியமான இரண்டு தோழியரின் பிறந்த நாளும் வந்தததால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. வலைப்பதியவும் செய்யும் அந்த இரு தோழியருக்கும் வாழ்த்து! அத்தோடு இந்த கார்த்திகை மாதத்தில், திருமணப்பந்தத்தில் இணைந்துகொள்ளும் அருமைத் தோழர் ஒருவருக்கும் திருமணநாள் வாழ்த்து உரித்தாகட்டும் (I am missing the opportunity to see your wedding ceremony buddy).

இறுதியாய், கனடாவில் இயல் விருது என்று ஒரு விருது படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவதை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் விருது வழங்கப்பட்டபின் இவரை விட அவருக்கு வழங்கியிருக்கலாம் என்று முணுமுணுப்பதைவிட, இந்த முறை என் சிற்றறிவுகுட்பட்டவகையில் இந்த விருதுக்காய் சிலரைப் பரிந்துரைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

கார்த்திகேசு சிவத்தம்பி
கி.ராஜநாராயணன்
அம்பை
சோ.தர்மன்
எம்.ஏ. நுஃமான்
ராஜம் கிருஷ்ணன்
வண்ணநிலவன்

நன்றி.