Thursday, September 15, 2005

ஆனால் போட்டிட்டு எடுத்திடுவன்

நான் படம் போடும்போதும் எடுப்பேன். படம் போட்டாப்பிறகும் எடுப்பேன். ஏன் படம் போடமல் கூட எடுப்பேன்.

P9120021
(sept 13/2005 @ BBQ party)

கனபேருக்கு இப்ப மதியவுணவு நேரமாய் இருக்கும் என்பதால், சாப்பிட மறந்து யாராவது கடுமையாக வேலை (வேறு எங்கு தமிழ்மணத்தில்தான்) செய்துகொண்டிருந்தால் போய் கெதியாய் உங்கடை மதியவுணவை மறந்துவிடாமல் சாப்பிடுங்கோ என்று நினைவூட்டத்தான் இந்தப்படம். மேலும் hotஆவி ஆகி கொதித்துக்கொண்டிருப்பவர்களும் இந்த cool photo வைப் பார்த்தாவது warm ஆகுவார்கள் என்று நம்பி(க்)- கை வைக்கின்றேன் இங்கே.

14 comments:

-/பெயரிலி. said...

இங்கை மழை; உமக்கொரு பகிடி :-(

இளங்கோ-டிசே said...

U talking abt Ophelia :-(?

Thangamani said...

Forgot the bananas I kept in my office. Thanks!

-/பெயரிலி. said...

yep

அலாஸ்காவிலே வாயப்பயம் வாய்க்கு வேண்டுமாம் :-(

பத்மா அர்விந்த் said...

நன்றாக கவிதை எழுதுபவரும், நல்ல பதிவுகள் எழுதுபவரும் திடீரென படம் காட்ட இறங்கிவிட்டதன் காரணம் என்னவோ?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கேளுங்க பத்மா, நல்லா கேளுங்க!!

அதுக்கு வேற பதிவு வச்சிருக்கேன்னு சப்பைக்கட்டு கட்டுவாரு. ஆனாலும், விடாதீங்க.

-மதி

-/பெயரிலி. said...

ப்ரோவுக்கு நல்லாச் சொல்லுங்கோ. படம் போடுற வலைக்காவாலிகளோட சேந்து அநியாயமாய்க் கெட்டுப்போனார். அப்பவே சொன்னனான், கார்த்திக்கோடை சேரவேண்டாமெண்டு. கேட்டாத்தானே? கெடுகிறவன் சொற்கேளான்; சாகிறவன் மருந்து குடியான் எண்டுறதுபோலை...

SnackDragon said...

அது சரிதான் நான் யாரோடு சேந்து கெட்டுப்போனேன்னும் நியாயமாச் சொல்லனும் இல்லியா? :-)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

:O)

//அது சரிதான் நான் யாரோடு சேந்து கெட்டுப்போனேன்னும் நியாயமாச் சொல்லனும் இல்லியா? :-) //

:OD

இளங்கோ-டிசே said...

பத்மா நீங்கள் கேட்டதில் நியாயமிருக்கின்றது. நான் யார் குற்றவாளிகள் என்று சுட்டலாம் என்று நினைத்தேனோ, அவர்கள் தாங்கள் குற்றஞ்செய்யவில்லைமாதிரி வந்து பின்னூட்டங்கள் இட்டிருக்கின்றார்கள் (இதைத்தான் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதா?). கார்த்திக் கூறுவதே உண்மை. வேண்டுமென்றால் இன்னொரு எதிர்த்தரப்புவாதியாக மலையேறத் தயாராகின்ற மொன்றியல்வாசியையும் சேர்த்துக்கொள்ளலாம் :-).

-/பெயரிலி. said...

/அது சரிதான் நான் யாரோடு சேந்து கெட்டுப்போனேன்னும் நியாயமாச் சொல்லனும் இல்லியா? :-)/
காமாஸ், சும்மா தானுண்டு சந்திரிகாவுண்டு என்று இருக்கிற சுந்தரவடிவேலை ஏன் இழுக்கிறீர்?

இளங்கோ-டிசே said...

தொடங்கிட்டானய்யா குழப்படியைத் தொடங்கிட்டானய்யா என்று மதி தலையில் குட்டமுன்னர் ஒரு முன்னெச்சரிக்கை வாக்குமூலம்
1. தலைப்பைப் பெரியதாக போட்டதால் எனது ப்ளாக்கரில் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த படத்தைக் காணோம்.
2.வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட நபர் மலையாள மாந்தீரிகத்தால், போட்ட பதிவுக்கு சூனியம் செய்திருக்கலாம்.
3. இங்கே சரியாக மழைபெய்துகொண்டிருப்பதால், படம் மழையில் கரைந்து போயிருக்கலாம்.

இளங்கோ-டிசே said...

//சும்மா தானுண்டு சந்திரிகாவுண்டு //
ப்ரோ, நீங்கள் குறிப்பிடும் சந்திரிக்கா இவரா?

-/பெயரிலி. said...

/ப்ரோ, நீங்கள் குறிப்பிடும் சந்திரிக்கா இவரா?/
அப்பவே நினைச்சன்; இந்தப்பாட்டுத்தான் வருமெண்டு